இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் பற்றி

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் 2015 ஏப்ரல் மாதத்தில், வாகன நிதி துறையில் முன்னணியில் உள்ள இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் என்ற வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமாக நிறுவப்பட்டது. மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்ற நிறுவனக் குடும்பத்தைச் சேர்ந்ததனால், இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் உயர்ந்த நோக்கங்கள் மற்றும் நெறிமுறைகளால் வழிநடத்தப்படுகிறது. வீட்டு நிதி தேவைகளுக்கான ஒரே இடத் தீர்வை வழங்கும் நம்பகமான முன்னணி நிதியாளராக இருப்பதே எங்களின் குறிக்கோள்
abt-banner

உயர்ந்த கொள்கைகளே, இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் அடையாளம்

  • phone

    நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குதல்

  • planner

    அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான தரமான செயல்பாட்டு நடைமுறைகள்.

  • Top-class

    மிக உயர்தரமான அபாய மேலாண்மை முறைகள்.

  • Empowered

    சாதனைகளின் மூலம் பெருமிதம் கொள்ளும் பணியாளர்களை ஊக்கப்படுத்துதல்.

  • green-energy

    சமூகப் பொறுப்புடன் செயல்படும் நிலையான செயல்முறைகள்.

about-curve

இந்துஜா குழுமம் பற்றி

“பிறருக்குக் கொடுப்பதற்காக உழைப்பதே எனது தர்மம் (கடமை)”Paramanand Deepchand
– பரமானந்த் தீப்சந்த் இந்துஜா (1901–1971)

நிறுவனர், இந்துஜா குழுமம்

இந்துஜா குழுமம் 1914 ஆம் ஆண்டு பரமானந்த் தீப்சந்த் இந்துஜா அவர்களால் நிறுவப்பட்டது. அவர் முன்னோக்கிய பார்வையும், சிறந்த வணிக நுணுக்கங்களும் கொண்ட பார்வையாளர். வாய்ப்புகளை கூர்மையான பார்வையால் கண்டறிந்து, அவற்றை வெற்றியாக மாற்றிய சிறந்த தொழிலதிபர்.

அவர் இந்தியாவில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து, நம் நாட்டிலேயே தனது வணிகத்தைத் தொடங்கினார். 1919 ஆம் ஆண்டு, இந்துஜா குழுமம் தனது முதல் சர்வதேச வணிகத்தை ஈரானில் தொடங்கியது. வணிக வங்கி மற்றும் வர்த்தகம் ஆகியவை நிறுவனத்தின் இரண்டு முக்கிய தூண்களாக விளங்கின. 1979 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்கு தலைமையகம் மாற்றப்படும் வரை, ஈரானே அதன் தலைமையிடமாக இருந்தது.

தற்போதைய தலைவர் ஸ்ரீசந்த், அவருடன் இணைந்து செயல்படும் அவரது சகோதரர்கள் கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகியோரின் தலைமையில், இந்துஜா குழுமம் தனது முன்னோடி மனப்பான்மை மற்றும் தொழில்முனைவோர் சிந்தனையால், வணிகத்தை விரிவுபடுத்தி, பன்முகத்தன்மையுடன் வளர்ந்துள்ளது. அதே சமயம், சமூக நலனுக்காக குறிப்பிடத்தக்க நன்கொடைகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்துஜா குழுமம் உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு பன்னாட்டு கூட்டுத்தாபனமாக, இங்கிலாந்தின் லண்டன் நகரில் தலைமையகம் கொண்டுள்ளது. அனைத்து கண்டங்களிலும் தன்னுடைய பன்முக வணிகங்களுடன் செயல்பட்டு, உலகின் மிகப்பெரிய வணிகக் குழுமங்களில் ஒன்றாக இருப்பதில் பெருமை கொள்கிறது. சுமார் 70,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம், உலகின் பல முக்கிய நகரங்களிலும், இந்தியாவின் பிரதான நகரங்களிலும் அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும், “அடிப்படையில் சேவை என்பது பக்தி; தனிநபரின் நலனைக் காணும் முயற்சி, குழும நலனில் பிரதிபலிக்க வேண்டும்” என்ற பணிக்கொள்கையை வழிகாட்டியாகக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

உலகளாவிய சுதந்திர சந்தை சீர்திருத்தங்களுடன் இணைந்து, புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் புதிய சந்தைகளுக்கு தன்னைச் சிறப்பாக ஏற்படுத்திக் கொண்டுள்ளது இந்துஜா குழுமம். இதன் விளைவாக, வங்கி மற்றும் நிதி, போக்குவரத்து, எரிசக்தி (எண்ணெய் மற்றும் மின்சாரம்) போன்ற பாரம்பரிய பொருளாதாரத் துறைகளிலும், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற புதிய பொருளாதாரத் துறைகளிலும் பங்களிக்கும் வகையில் குழுமம் தன்னை மூலதன ரீதியாக நிலைநிறுத்தியுள்ளது. இந்துஜா குழுமம் பாரம்பரிய மதிப்புகளைப் பின்பற்றுகிறது; மேலும் தங்கள் வணிக நிறுவனங்களில் “குடும்ப உணர்வு” என்ற கருத்தை வளர்ப்பதில் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை நிறுவனத்தின் முக்கிய வழிகாட்டுதல்களாக வலியுறுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனத்திலும் மற்றும் நிறுவன மட்டத்திலும் சிறந்த நவீன மேலாண்மை நடைமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் நிபுணர்களுக்கு சுயாதீன பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான உள் போட்டி, சிறப்பாக செயல்படும் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகைகள், மேலும் சிறந்த செயல்திறனைப் பாராட்டும் பண்புகள் ஆகியவை குழுமத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றன.

குழுமம் அதன் தொடக்கம் முதலே உலக மக்களும் அரசாங்கங்களும் இடையே சிறந்த புரிதலை உருவாக்குவதில் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகிறது. தாங்கள் செயல்படும் நாட்டுக்கும் தாய்நாட்டான இந்தியாவுக்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பது இந்துஜா குழுமத்தின் முக்கிய நம்பிக்கையாகும்.
இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ், டிரக் உற்பத்தியாளரான அசோக் லேலண்டின் நிதி பிரிவாக விளங்கும் இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் (HLF) இன் ஒரு அங்கமாகும். இது பல்வேறு வகையான நிதி தீர்வுகளை வழங்குகிறது. மேலும், இந்துஜா அறக்கட்டளை வழியாக உலகளாவிய அளவில் தொண்டு மற்றும் நன்கொடை நடவடிக்கைகளில் பங்காற்றுகிறது.

குழுமத்தின் தத்துவத்தைப் பற்றி

ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும், நூற்றாண்டுக்கும் மேலாக இந்துஜா குழுமக் குடும்பம் தனது வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்துஜா குழுமத்தின் நிறுவனர் பரமானந்த் தீப்சந்த் இந்துஜா (1901–1971) அவர்களின் முன்மாதிரி வாழ்வும், “பிறருக்குக் கொடுப்பதற்காக உழைப்பதே எனது தர்மம் (கடமை)” என்ற அவருடைய வலுவான நம்பிக்கையும், இந்த வெற்றியின் அடிப்படையாகும்.

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பே முக்கியம் என்பதில் பரமானந்த் அவர்களின் அனுபவங்கள், உள்ளுணர்வு மற்றும் நம்பிக்கை வழிகாட்டியன. அதன் மூலம் அவர் உருவாக்கிய ஐந்து வழிகாட்டும் கொள்கைகள், குழுமமும் குடும்பமும் தங்கள் வணிகத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் அடிப்படை நோக்கங்களாக அமைந்துள்ளன.

இந்தக் கொள்கைகள் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றவை. வணிகம், மேலாண்மை, தொண்டு மற்றும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவற்றை நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என்பதே, அவை காலத்தின் சோதனையைக் கடந்து நிலைத்திருப்பதற்கான காரணமாகும்.

விடாமுயற்சியுடன் உழைப்பது கடமை மட்டுமல்ல, அதே நேரத்தில் சமூகத்திற்கும் பிறருக்கும் ஏதாவது திருப்பித் தர வேண்டும் என்ற பொறுப்பையும் உடையது. கடின உழைப்பும் வெற்றியும் வணிக உலகில் மரியாதையைக் கொடுக்கும். அந்த மரியாதையை நிலைநிறுத்த, ஒருவர் தன் அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றக்கூடியவராகவும், தாம் பூர்த்தி செய்யக்கூடிய ஒப்பந்தங்களிலேயே ஈடுபடக்கூடியவராகவும் இருக்க வேண்டும். பொருளாதார சூழ்நிலை எதுவாக இருந்தாலும் — வளர்ச்சி அல்லது மந்தநிலை — இந்தக் கொள்கை எப்போதும் பொருந்தக்கூடியது.

எனவே தான், 'கொடுத்த வாக்கு ஒரு பத்திரம்' என்ற எண்ணம் இதன் மூலம் உருவாகிறது. இது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குநர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் நம்பிக்கையும் பற்றுதலையும் உருவாக்கி, அனைவருக்கும் பயனளிக்கும் நீண்டகால உறவுகளை வளர்க்க உதவுகிறது

இந்த இரண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறுவனர் புதிய சந்தைகள் மற்றும் தயாரிப்புகளை ஆராய்ந்தார். இதன் மூலம் குழுமம் புவியியல், தயாரிப்பு மற்றும் தொழில்துறை துறைகளில் பல்வகைப்படுத்தலை அடைந்தது. இதுவே மூன்றாவது நிலையான கொள்கைக்குக் காரணமானது — “உள்ளூரில் செயல்படுங்கள், உலகளவில் சிந்தியுங்கள்.”

அதன் இலட்சியம் எளிமையானதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது கடினமானதாகும். சாத்தியமான சந்தை முழு உலகமே ஆகும். உங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக எப்போதும் ஒரு வாடிக்கையாளர் இருப்பார் — சவால் என்பது அந்த சந்தையை அடையாளம் காண்பது, தயாரிப்பை அந்த சந்தைக்கு கொண்டு செல்வது, அதை போட்டி விலையில் வழங்குவது மற்றும் இறுதியில் திருப்திகரமான, விசுவாசமான வாடிக்கையாளரை உருவாக்குவதில் உள்ளது.

ஒவ்வொரு சந்தைக்கும் தனித்துவமான மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. அவற்றின் தேவைகளைப் புரிந்து கொள்ளுதல், அவற்றை அங்கீகரித்து மரியாதை செலுத்துதல், அவற்றின் உணர்வுகளுக்கு இணங்க நடப்பது — இவை அனைத்தும் வணிக வெற்றிக்கான முக்கியக் காரணிகளாகும்.

இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் அந்த ஆபத்தையும் அதன் பலனையும் ஒருங்கிணைந்து பகிர்ந்துகொள்வது உண்மையான முன்னேற்றத்தையும் பயனையும் அளிக்கும். “வளர்ச்சிக்கான கூட்டாண்மை” என்பது “உள்ளூரில் செயல்படு, உலகளவில் சிந்தி” என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது நிறுவனத்தின் உள்துறை மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இணைந்து செயல்படும் மனப்பாங்கையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு செயல்படுவதன் மூலம் மட்டுமே நிறுவனங்கள் மாற்றத்திற்கேற்ப நெகிழ்வாக இருந்து, நீண்டகால நோக்குடன் புதுமைகளை உருவாக்க முடியும்.

சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட பிறருடன் இணைந்து பணிபுரிவதன் மூலம் மதிப்புச் சங்கிலியில் (value chain) செலவுகளை குறைத்து பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும். இணைந்து செயல்படுவது, ஒருவரது வரம்புகளையும் திறமைகளையும் உணர உதவுகிறது. சரியான கூட்டாண்மையைத் தேடுவதன் மூலம் தேவையான நிபுணத்துவத்தையும் புதுமையையும் பெற்றுக்கொள்ளலாம். இப்படிப் பட்ட கூட்டாண்மையில், இரு தரப்பினரும் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வார்கள் — “ஆபத்தைப் பகிர்ந்தால், பலனையும் பகிர வேண்டும்” என்ற தெளிவான புரிதலுடன்.

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் பற்றி

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸின் நோக்கம், அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் — அதாவது; பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் — மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் அதன் வணிகத்தை தொடர்ந்து வளர்ப்பதாகும். நிர்வாகக் குழுவில் அறிவு, உத்தி மற்றும் புதுமையான எண்ணங்கள் கொண்டவர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

ஒரு நுணுக்கமான மட்டத்தில், இந்துஜா ஹவுசிங் ஃபைனான்ஸ் பின்வருவனவற்றைக் குறிக்கிறது

  • தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளித்தல்
  • அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான செயல்முறை நடைமுறைகளைப் பின்பற்றுதல்
  • உயர்தர அபாய மேலாண்மை நுட்பங்களை செயல்படுத்துதல்
  • இலக்குகளை அடைந்து பெருமை கொள்ளும் பணியாளர்களை ஊக்கப்படுத்துதல்
  • சமூக பொறுப்புடன் நிலையான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகளை நிலைநிறுத்துதல்

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ், வாகன நிதி துறையில் முன்னணி NBFCகளில் ஒன்றான இந்துஜா லேலண்ட் பைனான்ஸின் துணை நிறுவனமாக, ஏப்ரல் 2015ல் நிறுவப்பட்டது. அதன் கௌரவமிக்க தாய் நிறுவனத்தின் உறுதியான பாரம்பரியமும், உயர்ந்த கொள்கைகளும், இந்துஜா ஹவுசிங் பைனான்ஸை சிறந்த இலக்குகளால் ஊக்குவிக்கின்றன. அனைவராலும் விரும்பப்படும் நிதியாளராக மாறி, வீட்டு நிதி தேவைகளுக்கான ஒரே இட தீர்வுகளை வழங்குவது என்பதே அதன் நோக்கம்.

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ், 110 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க பாரம்பரியத்தை கொண்ட இந்துஜா குழுமத்தின் ஒரு பகுதியாகும். பல துறைகளில் வணிக நடவடிக்கைகள் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட இந்த குழுமம், உலகளவில் 10 முக்கிய துறைகளில் செயல்பட்டு, 1,50,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, குழுமத்தின் மரபும் மதிப்புகளும், இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தை வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனமாக முன்னெடுக்கின்றன

இலக்கு, நோக்கம் மற்றும் மதிப்புகள்

mission-top

இலக்கு

எங்கள் வணிகத்தை உறுதியான அடிப்படையில் வளர்த்துக் கொண்டு, பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தை உள்ளடக்கிய அனைத்து பங்காளிகளுக்கும் மதிப்பை உருவாக்குதல்.

mission-bottom
mission

நோக்கம்

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் பின்வரும் நோக்கங்களுடன் முன்னேறுகிறது:

  • தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குதல், அனைத்து கிளைகளிலும் செயல்முறை நடைமுறைகளை ஒரே மாதிரியாக்குதல் மற்றும் கடன், செயல்பாடு, சந்தை அபாயங்களில் வலுவான இடர் மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுதல்.
  • பெருமை மற்றும் சாதனை உணர்வுடன் தொடர்ந்து சிறந்த வணிக முடிவுகளை வழங்குவதற்காக பணியாளர்களை ஊக்கப்படுத்துதல்.
  • நிதி இணைப்பு (Financial Inclusion) நோக்கத்துடன் சமூகப் பொறுப்புடன் கூடிய நிலையான வணிக நடைமுறைகளைப் பின்பற்றுதல்.
  • ROA, ROE, NIM, செலவு-வருமான விகிதம் மற்றும் நிகர NPA போன்ற அளவுகோள்களின் அடிப்படையில் லாபம், உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனில் சந்தையில் முன்னோடியாக இருப்பது.
vission
vission

மதிப்புகள்

"உங்களின் அனைத்து வீட்டு நிதித் தேவைகளுக்கும், ஒரே இடத்தில்"

எங்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் வலுவான நெறிமுறைகள், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாங்கள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான நிதியாளராக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம், வீட்டு நிதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் சிறந்த வீட்டு நிதி நிறுவனத்தை வழங்குகிறோம்.

values

இந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் பின்வரும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது

  • shield
    நம்பிக்கை

    ஊழியர்களின் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் திறமை மீது பரவலான நம்பிக்கை நிலவுமாறு பணியிடச் சூழலை பராமரித்தல்.

  • headphones
    வாடிக்கையாளர் சேவை

    பொதுவான இலக்குகளை அடைய வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றும் பணியை முன்னெடுத்தல்.

  • design-tools
    திறமை

    தங்கள் பணிகளை திறம்படச் செய்ய தேவையான திறன்கள் மற்றும் பயிற்சிகளை கொண்ட ஊழியர்களால் வடிவமைக்கப்பட்ட பணியிடத்தை பராமரித்தல்.

  • collaboration
    குழுப் பணி

    நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்ற குழுக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.

  • badge
    தரம்

    சிறந்த பணித்திறனுடன், உயர்ந்த தரத்தை நோக்கமாகக் கொண்ட ஊழியர்களால் உருவாக்கப்படும் சிறப்பான பணியிட சூழலை மேம்படுத்தல்.

  • honesty
    நேர்மை

    எப்போதும் பொறுப்பு, உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் உயர்ந்த தரத்தைப் பேணுதல்.

  • namaste
    மரியாதை

    ஒவ்வொரு நபரின் மதிப்பையும் அங்கீகரித்து, எப்போதும் அவர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துதல்.

  • books
    பொறுப்புணர்வு

    தனிநபர்களாகவும் குழுக்களாகவும், தரமான சேவைகள் மற்றும் தீர்வுகளை சரியான நேரத்தில் வழங்குவதில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுதல்

தலைவர்

Dheeraj

திரு. தீரஜ் ஜி. இந்துஜா

திரு. தீரஜ் கோபிசந்த் இந்துஜா அவர்கள் 1993ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் B.Sc. (Hons) பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தின் இம்பீரியல் கல்லூரியில் திட்ட மேலாண்மையில் நிபுணத்துவத்துடன் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

தீரஜ் இந்துஜா அவர்கள், உலகம் முழுவதும் பன்முக வணிக அமைப்புகளை கொண்டுள்ள இந்துஜா குழுமத்தை சொந்தமாகக் கொண்டு வழிநடத்தும் இந்துஜா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை உறுப்பினர் ஆவார்.

100,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்துஜா குழுமத்தின் வணிகப் போர்ட்ஃபோலியோவில் வாகனத் துறை, ஆற்றல், உள்கட்டமைப்பு, நிதி & வங்கி, தகவல் தொழில்நுட்பம் & ITES, ஊடகம், சுகாதாரம் போன்ற பல துறைகள் அடங்கும். தீரஜ் அவர்கள் பல்வேறு வணிகத் துறைகளில் மூத்த மற்றும் தலைமைப் பதவிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவத்தை பெற்றுள்ளார்.

நிர்வாக இயக்குநர்

sachinpillaipp1

திரு. சச்சின் பிள்ளை

தொலைநோக்கு சிந்தனை மற்றும் வலுவான தலைமைத்துவ திறன்களைக் கொண்ட திரு. சச்சின் பிள்ளை அவர்கள் 13 ஏப்ரல் 2012 அன்று எங்களுடன் இணைந்தார். அவர் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் BBA பட்டமும், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி மேலாண்மை நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

நிதிச் சேவைத் துறையில் பல ஆண்டுகளாகப் பெரும் அனுபவம் பெற்றுள்ள அவர், எங்கள் நிறுவனத்தின் முக்கிய மூலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ளார். இதில் வணிக மேம்பாடு, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் சந்தைத் திறன்களை அடையாளம் காணுதல், முடிவெடுப்பை ஆதரிக்கும் தரவு முன்னறிவிப்பு போன்றவை அடங்கும். எங்கள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, அவர் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட்டில் நிர்வாக துணைத் தலைவராகவும் குழும வணிகத் தலைவராகவும் பணியாற்றினார். மேலும், HDFC வங்கி லிமிடெட்டில் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

சுயாதீன இயக்குநர்கள்

manju-agarwal

திருமதி. மஞ்சு அகர்வால்

அவர்கள் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் இந்திய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட கூட்டாளராக (Certified Associate) உள்ளார். 34 ஆண்டுகளுக்கும் மேலான வங்கித் துறை அனுபவம் கொண்ட அவர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநராக (டிஜிட்டல் வங்கி மற்றும் புதிய வணிகங்கள்) பணியாற்றியுள்ளார். அந்தப் பொறுப்பில், வங்கியின் புதிய டிஜிட்டல் முயற்சிகளை அறிமுகப்படுத்துதல், டெபிட் கார்டு உத்திகள், வணிக கையகப்படுத்தல், போக்குவரத்து தீர்வுகள், பரிவர்த்தனை வங்கிப் பணிகள் மற்றும் அரசு வணிகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை வழிநடத்தினார். அதற்கு முன்பு, அவர் கார்ப்பரேட் அலுவலகத்தில் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

Sundararajan

திரு. ஜி. எஸ். சுந்தரராஜன்

திரு. ஜி. எஸ். சுந்தரராஜன் அவர்கள் ஸ்ரீராம் குழுமத்தில் குழு இயக்குநராக பணியாற்றுகிறார்.

முன்னதாக, அவர் ஃபுல்லர்டன் இந்தியா கிரெடிட் கம்பெனி லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகவும், மேலும் ஃபுல்லர்டன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார். அவர் சீனாவில் உள்ள டெமாசெக்கின் இரண்டு நிதிச் சேவை முதலீட்டு நிறுவனங்களின் வாரியத்தில் உறுப்பினராக இருந்தார் — ஒன்று நான்ஜிங்கில் SME வணிகத்திற்கும் மற்றொன்று செங்டுவில் அவர்களின் கிராம வங்கி உரிமைக்கும். இந்திய வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் டெமாசெக்கின் தொலைநோக்குப் பார்வையை உருவாக்கும் பணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார், இதன் மூலம் நிறுவனம் நாட்டின் மிக வேகமாக வளர்ந்த மற்றும் பரந்த நெட்வொர்க் கொண்ட நிதி நிறுவனமாக வளர்ந்தது. இதற்கு முன்பு, அவர் இந்திய சிட்டி வங்கியின் SME மற்றும் சொத்து அடிப்படையிலான நிதி வணிகத்தின் நிர்வாக இயக்குநராகவும் தலைவராகவும் பணியாற்றினார். சிட்டி வங்கியில் அவர் நாடு முழுவதும் SME மற்றும் ABF வணிகத்தை உருவாக்கிய சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.

Parthasarathy

திரு. எஸ். வி. பார்த்தசாரதி

திரு. பார்த்தசாரதி அவர்கள் நிதிச் சேவைத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் இண்டஸ்இண்ட் பேங்க் லிமிடெட்டின் மூத்த மேலாண்மை குழுவின் (வாரியத்திற்கு முன் நிலை) ஒரு உறுப்பினராக இருந்து, நுகர்வோர் நிதிப் பிரிவின் (CFD) தலைவராக பணியாற்றினார். அவர் தலைமையிலான இப்பிரிவு வங்கியின் மேல்மட்ட மற்றும் கீழ்மட்ட வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தது. இதற்கு முன்பு, அவர் அசோக் லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட்டில் நிர்வாக இயக்குநராகவும் வணிகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திரு. எஸ். வி. பார்த்தசாரதி அவர்கள் இந்திய கணக்காளர் கழகத்தில் (ICAI) தகுதி பெற்ற கணக்காளர் ஆவார்.

Bhumika

திருமதி. பூமிகா பத்ரா

அவர் இந்தோரில் உள்ள DAVV-யில் வணிக இளங்கலை (B.Com) பட்டமும், சிம்பயோசிஸ் சொசைட்டியின் சட்டக் கல்லூரியில் சட்ட இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவர் மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலின் உறுப்பினராக உள்ளார். சட்டத் துறையில் 11 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ள இவர் தற்போது Crawford Bayley & Co. நிறுவனத்தில் இணை கூட்டாளராக பணியாற்றுகிறார். மேலும், டீம் ரிலோகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மாஸ்டர் வோஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்கோர் இங்க்ரீடியண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஷார்ப் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவிலும் உள்ளார்.

சுயாதீனமற்ற இயக்குநர்கள்

gopal

திரு. கோபால் மகாதேவன்

திரு. கோபால் மகாதேவன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிக இளங்கலை (B.Com) பட்டம் பெற்றுள்ளார். அவர் பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) ஆவார் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்தின் (ICAI) உறுப்பினராக உள்ளார். மேலும், இந்திய நிறுவனச் செயலாளர் கழகத்தின் (ICSI) தகுதி பெற்ற நிறுவனச் செயலாளராகவும் உள்ளார். திரு. மகாதேவன் பல்வேறு துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்றுள்ளார். தெர்மாக்ஸ் குழும நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவர் தெர்மாக்ஸ் லிமிடெட்டில் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றியதுடன், குழுமத்தின் பல நிறுவனங்களின் வாரியத்திலும் இயக்குநராக இருந்துள்ளார். மேலும், சன்மார் குழுமம், சிஃபி, மற்றும் அமரா ராஜா பேட்டரிகள் போன்ற நிறுவனங்களிலும் பல்வேறு நிதி பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

Sudip Basu

திரு. சுதீப் பாசு

திரு. சுதீப் பாசு இந்துஜா குழுமத்தின் குழுமத் தலைவர் – இடர் மேலாண்மை (Group Head – Risk) ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், அதில் 21 ஆண்டுகள் சிட்டி வங்கியுடன் இருந்துள்ளார். இவரது 19 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் இடர் மேலாண்மை துறையில் ஆகும், அங்கு அவர் பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளை கையாள்ந்துள்ளார். அவரது அனுபவம் வணிக வாகனங்கள், நிலம் மற்றும் கட்டிடங்கள் (Real Estate), நிதி சொத்துகள், மற்றும் பாதுகாப்பற்ற பணப்புழக்கக் கடன்கள் போன்ற பல சொத்து வகைகளைக் கொண்டுள்ளது. அவர் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் பணியாற்றியதுடன், பான்-ஆசியா போர்ட்ஃபோலியோவையும் கையாள்ந்துள்ளார். நிதி சேவைகளுக்கு முன்பு, அவர் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களுடன் 10 ஆண்டுகள் ஆட்டோமொட்டிவ் துறையில் பணியாற்றியுள்ளார், மேலும் ஓமான், மஸ்கட்டில் சுஸுகி நிறுவனத்தின் விநியோகஸ்தராகவும் பணியாற்றியுள்ளார். திரு. பாசு IIT கரக்பூரில் இருந்து இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார், மேலும் IIM பெங்களூரில் இருந்து மார்க்கெட்டிங் மற்றும் நிதியில் மேலாண்மை முதுநிலைப் பட்டம் (PGDM) பெற்றுள்ளார்.

மேலாண்மை குழு

தலைமை இயக்க அதிகாரி – திரு. விவேக் கண்ணன், தகுதியின் அடிப்படையில் பொறியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட சிக்ஸ் சிக்மா பிளாக் பெல்ட் பட்டம் பெற்றவர். நிதி துறையில் 24 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவம் கொண்டவர். வங்கி செயல்பாடுகள், செயல்முறை சிறப்புத் திறன், கடன் மற்றும் வசூல் மேலாண்மை, சில்லறை மற்றும் நிறுவன கடன், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பின்புல (Back-office) செயல்பாடுகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். சிட்டி, GE, இன்டெலினெட் குளோபல் சர்வீசஸ், பார்க்லேஸ், DHFL மற்றும் மோதிலால் ஓஸ்வால் போன்ற முன்னணி நிதி நிறுவனங்களில் முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

தலைமை நிதி அதிகாரி – திரு. பிரதீக் பரேக், கணினி பொறியியலில் B.E பட்டம் பெற்றவர் மற்றும் IIM லக்னோவின் முன்னாள் மாணவர். உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி துறைகளில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இந்தியாவில் TCS, அசோக் லேலேண்ட் கல்ஃப் ஆயில் மற்றும் லண்டனில் இந்துஜா ஆட்டோமொட்டிவ் ஆகிய நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார்.

வணிக மற்றும் சேகரிப்புத் துறைத் தலைவர் – திரு. சந்தீப் பந்த், MJPR பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றவர். வங்கியும் NBFC துறைகளும் சேர்ந்த LAP, வீட்டு கடன், தனிநபர் கடன், கடன் அட்டைகள் மற்றும் வணிக தவணைக் கடன்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளில் 18 ஆண்டுகளுக்கும் மேலான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அனுபவம் கொண்ட நிதி நிபுணர். ICICI வங்கி, சிட்டி பைனான்ஷியல், டாடா கேபிடல் மற்றும் யெஸ் வங்கி போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார்.

மனிதவளத் தலைவர் – டாக்டர் P.V. சாலமன் கிரண், மனிதவள மேலாண்மை / பணியாளர் நிர்வாகத்தில் முனைவர் பட்டம், கணிதம் மற்றும் சட்டத்தில் பட்டம், வணிக மேலாண்மை மற்றும் உளவியலில் முதுநிலைப் பட்டம், மேலும் ISTDயில் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் டிப்ளோமா பெற்றவர். ரிலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், ICICI லோம்பார்ட், சாஃப்ட்பாத் சிஸ்டம்ஸ் மற்றும் சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மக்கள் மேலாண்மை, திறமை மேலாண்மை, வணிக கூட்டாண்மை, பணியாளர் ஈடுபாடு, வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் மனிதவள இணக்கம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

கடன் மற்றும் செயல்பாடுகள் துறைத் தலைவர் – திரு. கிருஷ்ணா குமார், ICWA, M.Com, PGDBA (Finance), JAIIB மற்றும் ACT (ICAI) தகுதிகள் பெற்றவர். LAP, வீட்டு கடன், தனிநபர் கடன், வணிக தவணைக் கடன், செயல்பாட்டு மூலதனம், மருத்துவம் மற்றும் அலுவலக உபகரணங்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அண்டர்ரைட்டிங் அனுபவம் கொண்டவர். டாய்ச் வங்கி, மாக்மா ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், HSBC, IDBI மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார்.

தேசிய மேலாளர் (தொழில்நுட்பம்) – திரு. சுரஞ்சித் தத்தா, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் MSc பட்டம் பெற்றவர். வங்கி மற்றும் நிதித் துறைகளில் 21 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். ஃபுல்லர்டன் இந்தியா, எடெல்வைஸ், ICICI வங்கி, ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் மாக்மா ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

நிறுவன வணிக சட்டத் தலைவர் – திருமதி ஜோதி சர்மா, சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் LLB பட்டம் பெற்றவர். நிதித் துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான சட்ட ஆலோசனை அனுபவம் கொண்டவர். இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், BSL மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் குழு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

வாடிக்கையாளர் சேவைத் தலைவர் – திருமதி ஆர்த்தி கிருஷ்ணமூர்த்தி, லண்டனிலுள்ள நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ITMயில் மார்க்கெட்டிங் மற்றும் நிதியியலில் MBA பட்டம் பெற்றவர். நுகர்வோர் வங்கியில் 27 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், சொத்து, பொறுப்பு, சேவை செயல்பாடுகள், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார். HDFC வங்கி, சிட்டிகார்ப் நிதி, சோழமண்டலம் நிதி மற்றும் ஈக்விடாஸ் ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் வகித்துள்ளார்.

தலைமை இடர் அதிகாரி – திரு. சதீஷ் குமார், அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கல்லூரியில் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் IIM லக்னோவில் PGDM முன்னாள் மாணவர். 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், L&T நிதி, BSNL மற்றும் இந்துஜா லேலேண்ட் நிதியில் சில்லறை நிதி, நிறுவன நிதி மற்றும் இடர் மேலாண்மை துறைகளில் பணியாற்றியுள்ளார்.

நிறுவனச் செயலாளர் – திரு. ஸ்ரீனிவாஸ் ரங்கராஜன், இந்திய நிறுவனச் செயலாளர்கள் கழகத்திலிருந்து நிறுவனச் செயலாளர் தகுதி பெற்றவர், மேலும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் B.Com பட்டம் பெற்றுள்ளார். நிதி மற்றும் உற்பத்தித் துறைகளில் 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். முந்தைய காலத்தில் ஷிக்ஷா பைனான்ஸ் மற்றும் இந்துஜா லேலேண்ட் பைனான்ஸில் பணியாற்றியுள்ளார்.

தலைமை மேலாளர் – தகவல் தொழில்நுட்பம் (IT) – திரு. ஸ்டாலின் இருதயராஜ், ப்ரீஸ்ட் பல்கலைக்கழகத்தில் M.Tech பட்டம் பெற்றவர். IT மேம்பாடு மற்றும் ஆதரவுத் துறைகளில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். லட்சுமி விலாஸ் வங்கி, சாப்ட்வேர் பாரடைம்ஸ் இன்ஃபோடெக் மற்றும் ஈசி டிசைன் சிஸ்டம்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மார்க்கெட்டிங் தலைவர் – திரு. கெவின் சுந்தர், அண்ணா பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றவர் மற்றும் IIM கோழிக்கோட்டின் நிர்வாக முன்னாள் மாணவர். நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் FMCG துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், பிராண்ட் மேலாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். ஹென்கெல், மஹிந்திரா ஹாலிடேஸ் மற்றும் அக்ஷயா போன்ற பிராண்டுகளுடன் பணியாற்றியுள்ளார்.